ஜெ வீட்டில் நுழைந்த மர்ம நபர்
இட்லி வடையாரை முந்திக் கொண்டு ஒரு அரசியல் செய்தியை தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
சற்று முன் மக்கள் டிவியில் கேட்ட ஒரு செய்தி:
முன்னாள் முதல்வர் ஜெ வீட்டுக்குள், வாயிலில் இருந்த காவலரை கத்தியை காட்டி மிரட்டி, ஒரு மர்ம நபர் நுழைந்துள்ளார். பின்னர் அவரை, இன்னும் சிலருடன் சேர்ந்து கொண்டு காவலர் பிடிக்க முயற்சித்தபோது, அதே கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பித்து ஓடி விட்டார் !!! பின்னர், எப்பொழுதும் போல, போலீஸ் வலை வீசித் தேடி அந்த மர்ம நபரை தேடிப் பிடித்து கைது செய்து விட்டனர். அவரை ஆழ்வார்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயின் வக்கீல், முன்னாள் முதல்வருக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டதே, இந்த சம்பவத்திற்குக் காரணம் என்று நிருபர்களிடம் கூறினார். மேல் விவரங்களை "இட்லி வடை" நாளை தருவார் என்று எதிர்பார்க்கிறேன்.
எ.அ.பாலா
$$$ 256 $$$
2 மறுமொழிகள்:
பாலா,
எனக்கு என்னவோ பாதுகாப்பை திரும்ப பெற இவங்களாவே செய்த செட்டப்பா இருக்கும் என்று நினைக்கிறேன்.
thanks, Santhosh !
Post a Comment